இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனை விட, இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரே சிறந்த ஆட்டக்காரர் என்று புகழ்ந்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுபவர் டான் பிராட்மேன். தற்போது அவருக்கு இணையாக வைத்துப் புகழப்படுகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதத்தை நெருங்குவதால் அவர் பிராட்மேனுக்கு சமமானவராகக் கருதப்படுகிறார். இன்றைய பிராட்மேன் டெண்டுல்கர் என்று இங்கிலாந்து பத்திரிகை புகழாரம் சூட்டியிருந்தது.
ஆனால், ‘பிராட்மேனை விட டெண்டுல்கர் சிறந்தவர், கிரிக்கெட்டின் எல்லா காலக்கட்டத்திலும் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பிராட்மேனை சிறந்த வீரராக மக்கள் நினைக்கிறார்கள். அவரது பேட்டிங்கை நான் பார்த்ததில்லை. அதே நேரம் அவர் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க முடியாது.
பிராட்மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன். அவர் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆயிரக்கணக்கான ரன்களையும், டஜன் கணக்கில் சதங்களையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில் இன்னும் புதுமுக வீரர் போல் ரன்களை குவிக்க நினைக்கிறார்.
அவரது பேட்டிங்கை பார்க்கும்போது இளைஞர்போல் ஆடுவது தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். சரியான காலக்கட்டத்தில் அவர் பிறந்து இருப்பது அதிர்ஷ்டமே.
முதல் தர போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சதம் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற பெருமை எனக்கு உள்ளது. ஆனால் என்னால் 16 ஆண்டுகளில் 78 டெஸ்ட்டே ஆட முடிந்தது. 1970-ல் பிறந்து இருந்தால் மேலும் டெஸ்டில் விளையாடி இருக்கலாம். தவறான காலக்கட்டத்தில் நான் பிறந்ததாக நினைக்கிறேன்…”, என்றார்.
63 வயதான ஜாகீர்அப்பாஸ் 78 டெஸ்டில் விளையாடி 5062 ரன் எடுத்துள்ளார். 12 சதம் அடித்துள்ளார். 459 முதல் தரப் போட்டியில் விளையாடி 108 சதம் அடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதத்தை நெருங்குவதால் அவர் பிராட்மேனுக்கு சமமானவராகக் கருதப்படுகிறார். இன்றைய பிராட்மேன் டெண்டுல்கர் என்று இங்கிலாந்து பத்திரிகை புகழாரம் சூட்டியிருந்தது.
ஆனால், ‘பிராட்மேனை விட டெண்டுல்கர் சிறந்தவர், கிரிக்கெட்டின் எல்லா காலக்கட்டத்திலும் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பிராட்மேனை சிறந்த வீரராக மக்கள் நினைக்கிறார்கள். அவரது பேட்டிங்கை நான் பார்த்ததில்லை. அதே நேரம் அவர் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க முடியாது.
பிராட்மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன். அவர் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆயிரக்கணக்கான ரன்களையும், டஜன் கணக்கில் சதங்களையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில் இன்னும் புதுமுக வீரர் போல் ரன்களை குவிக்க நினைக்கிறார்.
அவரது பேட்டிங்கை பார்க்கும்போது இளைஞர்போல் ஆடுவது தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். சரியான காலக்கட்டத்தில் அவர் பிறந்து இருப்பது அதிர்ஷ்டமே.
முதல் தர போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சதம் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற பெருமை எனக்கு உள்ளது. ஆனால் என்னால் 16 ஆண்டுகளில் 78 டெஸ்ட்டே ஆட முடிந்தது. 1970-ல் பிறந்து இருந்தால் மேலும் டெஸ்டில் விளையாடி இருக்கலாம். தவறான காலக்கட்டத்தில் நான் பிறந்ததாக நினைக்கிறேன்…”, என்றார்.
63 வயதான ஜாகீர்அப்பாஸ் 78 டெஸ்டில் விளையாடி 5062 ரன் எடுத்துள்ளார். 12 சதம் அடித்துள்ளார். 459 முதல் தரப் போட்டியில் விளையாடி 108 சதம் அடித்துள்ளார்.
0 comments:
Post a Comment